search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்மாபேட்டை அருகே வீடு புகுந்து திருட்டு
    X

    அம்மாபேட்டை அருகே வீடு புகுந்து திருட்டு

    அம்மாபேட்டை அருகே வீடு புகுந்து திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டை, காட்டையராஜாநகரை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 58).

    அரிவாள் அடிக்கும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி ருக்மணி. நேற்று மதியம் கணவரும், மனைவியும் வீட்டை பூட்டி விட்டு சேலத்துக்கு சென்றனர்.

    மாலையில் அவர்கள் வீடு திரும்பியனர். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    அதில் இருந்த பிரேஸ் லெட், தோடு, செயின் உள்பட 5 பவுன் நகை திருட்டு போயிருந்தது. வீட்டின் பின் பக்க கதவு நெம்பி திறக்கப்பட்டு கிடந்தது.

    யாரோ மர்ம நபர்கள் பின் பக்க கதவு வழியாக உள்ளே நுழைந்து பீரோவை திறந்து அதில் இருந்த நகைகளை திருடி சென்று உள்ளனர்.

    இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×