search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமத்தி வேலூர் அருகே லாரி மோதி ஆசிரியர் பலி
    X

    பரமத்தி வேலூர் அருகே லாரி மோதி ஆசிரியர் பலி

    பரமத்தி வேலூர் அருகே லாரி மோதி ஆசிரியர் பலியானார். அவரது மனைவி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள முருக கவுண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திர சேகரன் (வயது37). இவர் மஞ்ச பாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி உமாமகேஷ்வரி (30) இவரும் அரசு பள்ளி ஆசிரியை ஆவார்.

    நேற்று பிற்பகல் கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பரமத்தி சென்று கொண்டிருந்தனர். தனியார் பள்ளி அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரசேகரனும், உமாமகேஷ்வரியும் படுகாயம் அடைந்தனர்.

    உடனே இரண்டு பேரும் ஆம்புலன்ஸ் மூலம் கோவை கொண்டு செல்லப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சந்திரசேகரன் பரிதாபமாக இறந்தார். உமா மகேஷ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×