என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அதிமுக ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்கவில்லை- அமைச்சர் உதயகுமார் பேச்சு
Byமாலை மலர்25 Aug 2018 6:57 AM GMT (Updated: 25 Aug 2018 6:57 AM GMT)
அ.தி.மு.க. ஆட்சி கவிழும் என நினைத்த எதிர்கட்சிகளின் கனவு பலிக்காமல் 17 மாத காலமாக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது என்று அமைச்சர் உதயகுமார் பேசினார். #ADMK #TNMinister #Udhayakuamr
ஆரணி:
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிற்கு பிறகு இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று எதிர்க்கட்சியினர் கனவு கண்டனர். புதிய முதல்-அமைச்சர்கள் நாங்கள்தான் என்று கூறினர். அவர்களுடைய கனவு பலிக்காமல் 17 மாத காலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி நடத்தி நம்மை வழிநடத்திசெல்கின்றனர்.
தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.
இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரின் 17 மாத ஆட்சி குறித்து சாதனை விளக்க 3-வது கட்ட சைக்கிள் பேரணி ஆரணியில் தொடங்கியது.
இதன் தொடக்க நிகழ்ச்சி ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள அம்மா திடலில் நடந்தது. அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வரவேற்றார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கி சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தொடர்ந்து நீதிமன்றம் மூலம் ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைத்து வருகிறார்கள். அது நடக்காது. அ.தி.மு.க.வின் 1½ கோடி தொண்டர்கள் வீறுகொண்டு எழுவார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 1, 250 இளைஞர்கள் சீருடை அணிந்து அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். தினமும் இந்த சைக்கிள் பேரணி காலை 7 மணிக்கு தொடங்கும். சில பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்படும். ஒரு சில பகுதிகளில் பள்ளி மாணவர்களிடத்தில் வாசிப்புத் திறன் மேற்கொள்ளப்படும். நீங்கள் சைக்கிள் ராஜாவாக இனியும், எப்போதும் உலா வருவீர்கள்.
இந்த சைக்கிள் பயணம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் 300 கி.மீ. தொலைவிற்கு நடக்கிறது. நிறைவு நிகழ்ச்சி இதே இடத்தில் 28-ந் தேதி நடக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர்கபில் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #ADMK #TNMinister #Udhayakuamr
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X