என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே நிலச்சரிவில் சிக்கி குட்டி யானை பலி
உத்தமபாளையம்:
தேனி அருகே சின்னமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட ஹைவேவிஸ் மலைப்பகுதி. இங்கு யானை, மான், முயல் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்தது.
இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்த விழுந்தன.
இந்த நிலையில் மகாராஜா மெட்டு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்தில் 1 வயது மதிக்கத் தக்க குட்டி ஆண் யானை இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் யானையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வனத் துறையினர் கூறுகையில் ஹைவேவிஸ் மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. எனவே வனப்பகுதியில் ஈரப்பதமாக காணப்படுகிறது. உணவு தேடி வந்த யானை திசை மாறி நிலச்சரிவில் சிக்கி இருக்கலாம். அப்போது வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டு இறந்துள்ளது.
வனப்பகுதியில் யானை உள்பட வன விலங்குகளின் தண்ணீர் தேவைக்கு பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இறந்த யானை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்