என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாணவன் தீக்குளித்து தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்24 Aug 2018 1:34 PM GMT (Updated: 24 Aug 2018 1:34 PM GMT)
சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் மன முடைந்த மாணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவர் கிரேன் ஆப்ரேட்டாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வெங்கடேஸ்வரி. இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது15).
இவர் ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கோவிந்தசாமி பெருந்துறையை அடுத்த விஜயமங்கலத்தில் குடும்பத்துடன் தங்கி உள்ளார். கடந்த 20-ந்தேதி அன்று பள்ளியில் கோகுலகிருஷ்ணனை சகமாணவர்கள் கேலி கிண்டல் செய்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கோகுலகிருஷ்ணன் விஜயமங்கலத்தில் அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தருமபுரி அரசு மருத்துவமனையில் கோகுலகிருஷ்ணனை சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X