search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கெலவரப்பள்ளி அணையில் பதுங்கி உள்ள யானைகள்- பொதுமக்கள் பீதி
    X

    கெலவரப்பள்ளி அணையில் பதுங்கி உள்ள யானைகள்- பொதுமக்கள் பீதி

    கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ள யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பேரண்ட பள்ளி அருகே உள்ள தைலக்காட்டில் நேற்று 4 யானைகள் புகுந்தன.

    ஏ.செட்டிப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வந்த இந்த யானைகள் தைலக்காட்டில் சுற்றிவிட்டு ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் புகுந்தது.

    அங்கிருந்து அந்த யானைகளை காட்டிற்குள் விரட்ட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். முடியவில்லை. யானைகள் புகுந்ததால் முத்தாலி கிராமமக்கள் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.

    இந்த நிலையில் அந்த யானைகள் இன்று காலை முத்தாலி கிராமத்தில் இருந்து புறப்பட்டு கெலவரப்பள்ளி அணைக்கு வந்து குளியல் போட்டன. தற்போது அந்த யானைகள் கெலவரப்பள்ளி அணை பாலத்துக்கு அருகே உள்ள விவசாய நிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளது.

    யானைகள் நடமாட்டம் உள்ளதால் அந்த பகுதிக்கு கிராமமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர். #tamilnews
    Next Story
    ×