search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்காசியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
    X

    தென்காசியில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

    தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    தென்காசி:

    தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை திருமண மண்டபத்தில் ம.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ராசேந்திரன் தலைமை தாங்கினார். பொருளாளர் சுரண்டை ராமகிருஷ்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சுரண்டை நடராசன், மாநில தீர்மானக் குழு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் வரும் 26-ந்தேதி தென்காசி அருகே உள்ள குத்துக்கல்வலசை எஸ்.ஆர்.ஆர். திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிற்கு நெல்லை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட எல்லையான ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் விலக்கு பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கவும், அந்த நிகழ்ச்சியில் திரளான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது.

    Next Story
    ×