என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக கவர்னர் 29-ந் தேதி கோபி வருகை
Byமாலை மலர்24 Aug 2018 10:27 AM GMT (Updated: 24 Aug 2018 10:27 AM GMT)
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வருகிற 29-ந்தேதி கோபி வருகிறார். அன்று தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
கோபி:
கோபி வாய்க்கால் ரோட்டில் டி.எஸ். ராமன், சரோஜினிதேவி விடுதிகள் உள்ளன. இதை முன்னாள் கோபி நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியமான ஜி.எஸ்.லட்சுமணன் நிறுவினார்.
இந்த விடுதியில் இவருடைய உருவச்சிலை இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். டெல்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங் தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் மாணவ, மாணவிகள் பேரவை தலைவர் தொட்டு குண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
முன்னதாக தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங் தலைவர் மாருதி வரவேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.ராமன், சரோஜினிதேவி விடுதி முன்னாள் மாணவ, மாணவிகள், விடுதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
கோபி வாய்க்கால் ரோட்டில் டி.எஸ். ராமன், சரோஜினிதேவி விடுதிகள் உள்ளன. இதை முன்னாள் கோபி நகர்மன்றத் தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியமான ஜி.எஸ்.லட்சுமணன் நிறுவினார்.
இந்த விடுதியில் இவருடைய உருவச்சிலை இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் சார்பில் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வரும் 29-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது.
விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் உருவச்சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலை வகிக்கிறார். டெல்லி அகில இந்திய ஹரிஜன் சேவக் சங் தலைவர் சங்கர்குமார் சன்யால், கோபி ஹரிஜன் சேவக் சங் தலைவர் வெங்கடேஸ்வரன், முன்னாள் மாணவ, மாணவிகள் பேரவை தலைவர் தொட்டு குண்ணன், ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
முன்னதாக தமிழ்நாடு ஹரிஜன் சேவக் சங் தலைவர் மாருதி வரவேற்று பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை டி.எஸ்.ராமன், சரோஜினிதேவி விடுதி முன்னாள் மாணவ, மாணவிகள், விடுதி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X