search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மாட்டுவண்டி- குதிரை வண்டி போட்டிகள்: ஸ்ரீவைகுண்டத்தில் 26-ந் தேதி நடக்கிறது

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் வருகிற 26-ந்தேதி பெருங்குளத்தில் நடக்கிறது.
    தூத்துக்குடி:

    அமைச்சர் கடம்பூர் ராஜூ, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70-வது பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் பெருங்குளம் பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பெருங்குளத்தில் நடக்கிறது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயலாளர் செல்லத்துரை தலைமை வகிக்கிறார், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலை வைக்கிறார். பெரிய மாட்டு வண்டி போட்டியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைக்கிறார்.சிறிய மாட்டு வண்டி போட்டியை மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மொத்தம் ரூ. 2 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சிக்கு அனைத்து ‌மாவட்ட, ‌தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், தொழிற்சங்க நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், இளைஞர்-இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள், பேரவை நிர்வாகிகள், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொள்ள கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×