search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டுவில் முகவரி கேட்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்
    X

    வத்தலக்குண்டுவில் முகவரி கேட்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் மோதல்

    வத்தலக்குண்டுவில் முகவரி கேட்பதில் ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் பயங்கரமாக மோதிக் கொண்டனர்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பாலகவின், விஜய் அழகன். இவர்கள் கணவாய் பட்டி பகுதிக்கு சென்றனர். அங்கு சரண்குமார், அஜித்குமார் ஆகியோரிடம் ஒரு குறிப்பிட்ட முகவரி மற்றும் அதில் இருக்கும் ஆட்கள் குறித்து கேட்டுள்ளனர்.

    வெளியூரில் இருந்து வந்து தங்களிடமே விசாரிப்பதா? என அஜித்குமார் மற்றும் சரண்குமார் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இது மோதலாக மாறியது. 4 பேரும் ஒருவருக்கொருவர் பயங்கரமாக தாக்கிக் கொண்டனர். இது குறித்து வத்தலக்குண்டு போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் விஜய் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலகவின், விஜய் அழகன், சரண்குமார், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் கைது செய்து எதற்காக பிரச்சினை ஏற்பட்டது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×