search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேவதானப்பட்டி அருகே கார், வேன் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் பலி
    X

    தேவதானப்பட்டி அருகே கார், வேன் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் பலி

    தேவதானப்பட்டி அருகே கார் மற்றும் வேன் அடுத்தடுத்து மோதியதில் வாலிபர் துடிதுடித்து உயிரிழந்தார்.

    தேவதானப்பட்டி:

    நிலக்கோட்டை இ.பி. காலனியை சேர்ந்த முத்து மகன் விக்னேஷ் (வயது20). இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று பெரியகுளம்- வத்தலக்குண்டு ரோட்டில் காட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவரது பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விக்னேஷ் திண்டுக்கல் நோக்கி சென்ற வேன் மீது விழுந்தார். 10 அடி தூரம் வரை இழுத்து செல்லப்பட்ட விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் சங்கணாச்சேரியை சேர்ந்த விஷ்ணுமோகன், வேனை ஓட்டி வந்த ஆண்டிப்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (36) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×