search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கந்தர்வக்கோட்டையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி
    X

    கந்தர்வக்கோட்டையில் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி

    கந்தர்வகோட்டை தெற்கு ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
    கந்தர்வக்கோட்டை:

    கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை வடக்கு மாவட்டம்  கந்தர்வகோட்டை தெற்கு  ஒன்றிய மற்றும் நகர தி.மு.க சார்பாக மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் புகழஞ்சலி ஒன்றிய அவை தலைவர்  குஞ்சப்பா தலைமையில் நடைபெற்றது. 

    கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் பரமசிவம் தீர்மானத்தை வாசித்தார். உருவப்படத்திற்கு மாலை தூவி மரியாதை செய்து புகழஞ்சலி வாசித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ராஜேந்திரன், ராமசாமி, சவுந்தர்ராஜன்,   இளங்கோவன், மாவட்ட பிரதிநிதிகள் அர்சுணன், மதியழகன், நகரச்  செயலாளர் ராஜா, நகர  இளைஞரணி அமைப்பாளர்   கலையரசன், முன்னாள்  மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதையும், தலைவருக்கு புகழஞ்சலியும் செய்தனர்.
    Next Story
    ×