search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் பொது கணக்கு குழு கூட்டம் இன்று நடந்தது
    X

    சட்டசபையில் பொது கணக்கு குழு கூட்டம் இன்று நடந்தது

    புதுவை சட்டசபையில் பொதுகணக்கு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பொதுகணக்கு குழு கூட்டம் சட்டசபை வளாகத்தில் உள்ள கமிட்டி அறையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு பொது கணக்கு குழு தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தமிழகம் மற்றும் புதுவைக்கான முதன்மை தணிக்கை இயக்குனர் ஜெனரல் தேவிகா நாயர், துணை தணிக்கை தலைமை ஜெனரல் பெஞ்சமின் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சட்டமன்ற மதிப்பீடு குழு தலைவர் அன்பழகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், தீப்பாய்ந்தான், சட்டமன்ற செயலாளர் வின்சென்ட் ராயர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் 2010-1011, 2011-2012 ஆகிய காலங்களில் அரசு செய்த செலவினங்கள், ஏற்பட்ட காலதாமதம், முறைகேடு ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    Next Story
    ×