search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது - கருணாநிதி, வாஜ்பாய்க்கு இரங்கல்
    X

    அதிமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது - கருணாநிதி, வாஜ்பாய்க்கு இரங்கல்

    அதிமுகவின் செயற்குழு கூட்டம் அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் தொடங்கியது. #AIADMK
    சென்னை:

    அதிமுக செயற்குழு கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் மதுசூதணன் தலைமையில் சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

    கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய், எம்.எல்.ஏ போஸ் ஆகியோர் மற்றும் கேரள மழை வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த தமிழக அரசை பாராட்டி தீர்மானம், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்ககோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 
    Next Story
    ×