search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செஞ்சி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    செஞ்சி அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம்

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நாளை 16 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சோகுப்பம் கிராமத்தை சேர்ந்த பீமாராவ் என்பவருக்கும் காட்டுசித்தாமூரை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து செஞ்சி சைல்டுலைன் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் தாசில்தார் ரங்கநாதன், சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளர் ஜான்போஸ்கோ, சமூகநல அலுவலர் பிரபாவதி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் பிரபு ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, 18 வயது பூர்த்தியாகாமல் மகளுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என எச்சரித்தனர்.

    இதையடுத்து 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்து வைப்பதாக அதிகாரிகளிடம் சிறுமியின் பெற்றோர் எழுத்து பூர்வமாக உறுதியளித்தனர். இதையடுத்து சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

    Next Story
    ×