search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுபோதையால் விபரீதம்: சாலையோர பாறையில் மொபட் மோதி தொழிலாளி பலி
    X

    மதுபோதையால் விபரீதம்: சாலையோர பாறையில் மொபட் மோதி தொழிலாளி பலி

    மது போதையில் மொபட்டை ஓட்டி சென்ற வெங்கடேசன் சாலையோர பாறையில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே குள்ளட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 30). கூலி தொழிலாளி. பிக்கனப்பள்ளி கிராமம் அருகே தண்டரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனிராஜாசாரி(40).

    சம்பவத்தன்று மது போதையில் வெங்கடேசனும், முனிராஜாசாரியும் ஒரே மொபட்டில் தேன்கனிக்கோட்டையில் இருந்து குள்ளட்டி கிராமத்துக்கு சென்றனர். அப்போது சம்மந்தக்கோட்டை கிராமம் அருகே சென்ற போது சாலையோரம் இருந்த பாறை மீது மொபட் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த முனிராஜாசாரிக்கு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மது போதையில் மொபட் ஓட்டி சென்றதால் வெங்கடேசன் பலியாகி விட்டார்.எனவே மது போதையில் வாகனம் ஓட்ட கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். 
    Next Story
    ×