search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமலையில் குடிநீர் தொட்டியில் வாலிபர் பலி
    X

    சிறுமலையில் குடிநீர் தொட்டியில் வாலிபர் பலி

    சிறுமலையில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை சோதனைச்சாவடி அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மிகப் பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்.

    அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா? யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×