என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறுமலையில் குடிநீர் தொட்டியில் வாலிபர் பலி
Byமாலை மலர்22 Aug 2018 9:56 AM GMT (Updated: 22 Aug 2018 9:56 AM GMT)
சிறுமலையில் விலங்குகள் தண்ணீர் குடிக்கும் தொட்டியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை சோதனைச்சாவடி அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மிகப் பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்.
அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா? யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை சோதனைச்சாவடி அருகே வன விலங்குகள் தண்ணீர் குடிப்பதற்காக மிகப் பெரிய தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இன்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். விளையாட்டு பயிற்சிக்கு பயன்படுத்தும் பனியன் மற்றும் அரைக்கால் சட்டை அணிந்திருந்தார்.
அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் ஆகி இருந்ததால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியுடன் அவரது உடலை மேலே கொண்டு வந்து திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடிபோதையில் தவறி விழுந்தாரா? யாரேனும் அடித்து தொட்டியில் வீசிச் சென்றார்களா? என பல்வேறு கோணங்களில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X