search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்போரூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் பொருட்கள் கொள்ளை
    X

    திருப்போரூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 6 லட்சம் பொருட்கள் கொள்ளை

    திருப்போரூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூரை அடுத்த காலவாக்கத்தை சேர்ந்தவர் மன்னார். இவர் அதே பகுதியில் வீட்டு அலங்கார கம்பிகள் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு அவர் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    இன்று காலை கடைக்கு வந்த போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த சுமார் 300 கிலோ காப்பர் வயர்கள், கட்டிங் எந்திரம் உள்ளிட்ட பொருட்களை காணவில்லை. நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் அவற்றை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 6 லட்சம் ஆகும்.

    இதேபோல் அருகில் உள்ள கார் பழுது பார்க்கும் கடையின் ‌ஷட்டரும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் பணம், பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×