search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்
    X

    தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் - வானிலை மையம் தகவல்

    வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறினார். #Rain #MeteorologicalCentre
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை கேரளா மாநிலத்திலும், கர்நாடகாவிலும் அளவுக்கு அதிகமாக கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பல ஏரிகள் நிரம்பின. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்தது.

    இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு லேசான மழை பெய்யும்’ என்றார்.

    தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர நிலவரப்படி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 4 செ.மீ., வால்பாறை 3 செ.மீ., நீலகிரி மாவட்டம் தேவலா பகுதியில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது. #Rain #MeteorologicalCentre

    Next Story
    ×