search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: தொழில் அதிபர் பலி
    X

    சத்தியமங்கலம் அருகே லாரி - மோட்டார்சைக்கிள் மோதி விபத்து: தொழில் அதிபர் பலி

    சத்தியமங்கலம் அருகே லாரியும், மோட்டார்சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் தொழில் அதிபர் பரிதாபமாக இறந்தார்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பாலு என்கிற பாலசுப்பிரமணியம் (வயது 63). இவர் விண்ணப்பள்ளியில் நூல் மில் மற்றும் சத்தியமங்கலத்தில் தங்கும் விடுதி வைத்து நடத்தி வந்தார். பாலு நேற்று காலை சத்தியமங்கலத்தில் உள்ள தனது தங்கும் விடுதிக்கு சென்றுவிட்டு பெட்ரோல் பங்குக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    சத்தியமங்கலம்-கோவை ரோட்டில் எஸ்.ஆர்.டி. கார்னர் அருகே சென்றபோது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக பாலுவின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச்சென்ற லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    இறந்த பாலுவுக்கு சரோஜா (53), லதா (46) ஆகிய 2 மனைவிகளும், தேவி (27), சிவபிரியா (25), தீபிகா (18) ஆகிய 3 மகள்களும் உள்ளார்கள். 
    Next Story
    ×