என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்21 Aug 2018 4:10 PM GMT (Updated: 21 Aug 2018 4:10 PM GMT)
வாலிபர் காதலிக்க வற்புறுத்தியதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் மதுமிதா (வயது 18). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பண்ணந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவி மதுமிதாவை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மதுமிதா அவரை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த மதுமிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பண்ணந்தூர் இந்திரா நகரை சேர்ந்தவர் முனுசாமி. இவருடைய மகள் மதுமிதா (வயது 18). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பண்ணந்தூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், மாணவி மதுமிதாவை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மதுமிதா அவரை காதலிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து காதலிக்குமாறு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இதன் காரணமாக மனமுடைந்த மதுமிதா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த பாரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர்கள் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X