search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
    X

    திருச்சி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

    திருச்சி அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


    திருச்சி பாலக்கரை மஞ்சக்கரை தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). இவர் திருச்சி கோர்ட் பஸ் நிலையத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது பையில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிக் கொண்டிருந்தபோது அந்த வழியே வந்த வாலிபர், அவரின் பணத்தை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சரவணன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து செசன்ஸ் கோர்ட் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் குளித்தலை கோட்டைமேட்டை சேர்ந்த மகாலிங்கம் (32) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் கனகராஜ் (45). இவர் அரியமங்கலம் எஸ்.ஐ.டி. பஸ்நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அவரின் சட்டைப்பையில் இருந்த பணத்தை வாலிபர் ஒருவர் எடுத்து தப்பி ஓட முயன்றார். உடனே கனகராஜ் வாலிபரை மடக்கி பிடித்து அரியமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த நிக்கோலஸ் என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×