என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தேனி அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன்
தேனி:
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள காமையகவுண்டன்பட்டி கூத்தநாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரன் (வயது24). இவரது உறவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள வீட்டில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இந்த விபத்துக்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (27) என்பவர்தான் காரணம் என இந்திரன் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சந்திரன் அவரது தந்தை பரமன், தாய் மணியம்மாள் ஆகியோர் இந்திரன் வீட்டிற்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கினர். மேலும் மணியம்மாள் பிடித்துக் கொள்ள தந்தையும் மகனும் அவரை அரிவாளால் வெட்டினர்.
இதை தடுக்க வந்த அவரது நண்பர் விஸ்வநாதன் (17) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் தேனி மற்றும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திரன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்