search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன்
    X

    தேனி அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய தந்தை-மகன்

    தேனி அருகே வாலிபர்களை அரிவாளால் வெட்டிய தந்தை மற்றும் மகனை போலீசார் கைது செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகில் உள்ள காமையகவுண்டன்பட்டி கூத்தநாச்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரன் (வயது24). இவரது உறவினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள வீட்டில் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

    இந்த விபத்துக்கு அதே பகுதியை சேர்ந்த சந்திரன் (27) என்பவர்தான் காரணம் என இந்திரன் சந்தேகப்பட்டார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    சம்பவத்தன்று சந்திரன் அவரது தந்தை பரமன், தாய் மணியம்மாள் ஆகியோர் இந்திரன் வீட்டிற்கு சென்று அவரை தரக்குறைவாக பேசி தாக்கினர். மேலும் மணியம்மாள் பிடித்துக் கொள்ள தந்தையும் மகனும் அவரை அரிவாளால் வெட்டினர்.

    இதை தடுக்க வந்த அவரது நண்பர் விஸ்வநாதன் (17) என்பவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம் அடைந்த 2 பேரும் தேனி மற்றும் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து இந்திரன் ராயப்பன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் மற்றும் அவரது தந்தையை கைது செய்தனர்.

    Next Story
    ×