search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வியாழக்கிழமை வாஜ்பாய் அஸ்தி புதுவை வருகிறது
    X

    வியாழக்கிழமை வாஜ்பாய் அஸ்தி புதுவை வருகிறது

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை மறுதினம் புதுவை கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் கடலில் கரைக்கப்படுகிறது.
    புதுச்சேரி:

    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி புனித நதிக்கரைகள், கடல்களில் கரைக்கப்பட உள்ளது. இதேபோல் புதுவையிலும் கரைக்கப்பட உள்ளது.

    அஸ்தியை பெறுவதற்காக மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் பெங்களுரூ வழியாக டெல்லி செல்கிறார். அவர் புதுவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாளை மறுதினம் வாஜ்பாயின் அஸ்தி புதுவைக்கு கொண்டு வரப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த ஒரு நாள் வைக்கப்படுகிறது.

    இதனை தொடர்ந்து சனிக்கிழமை முதல்- அமைச்சர், கவர்னர் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் புகழஞ்சலி நிகழ்ச்சிக்கு நடக்கிறது. தொடர்ந்து அவரது அஸ்தி கடலில் கரைக்கபட உள்ளது.

    ரபேல் விமான ஊழல் தொடர்பாக முதல்- அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளது பொய்யான குற்றச்சாட்டு. ரபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நிரூபிக்கப்பட்டால் துறை அமைச்சர் ராஜினாமா செய்வார். உலகிலேயே 4 ஆண்டுகள் 1 ரூபாய் கூட ஊழலற்ற ஆட்சியை பா.ஜனதா நடத்தி வருகிறது.

    இவ்வாறு சாமிநாதன் கூறினார்.
    Next Story
    ×