search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் - ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு
    X

    எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார் - ஸ்டாலின் மீது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்வதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். #MinisterJayakumar
    சென்னை:

    தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தண்ணீரை சேமிக்கும் வகையில் அதிமுக அரசு தொலைநோக்கு பார்வையில் ஏராளமான செயல் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.



    ஆனால் திமுக ஆட்சிக் காலத்தில் 500 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்துள்ளது. எல்லாவற்றிலும் அரசியல் கலந்து ஆதாயம் தேடி, மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தோல்வி அடைவதுதான் ஸ்டாலினின் ஒரே பணியாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் காவிரி நீர் வீணாக கடலில் கலப்பது வேதனையளிப்பதாகவும், கடலில் கலக்கும் காவிரி நீரை தடுத்து வேளாண்மைக்கும், குடிநீர் தேவைகளுக்கும் திருப்பி விட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது. #MinisterJayakumar
    Next Story
    ×