search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
    X

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 900 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் 900 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
    சென்னை:

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் வழியாக ரேஷன் அரிசிகள் கடத்தப்படுவதாக ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அனூப், சரோஜ்குமார் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைத்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது எழும்பூர் வந்த திருக்குறள் மற்றும் காச்சிகூடா எக்ஸ்பிரஸ் ரெயில்களின் பொது பெட்டிகளில் மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்ததை தனிப்படையினர் கண்டுபிடித்தனர்.

    இதையடுத்து 37 மூட்டைகளில் இருந்த 900 கிலோ ரேஷன் அரிசியை ரெயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை அண்ணாநகர் உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 
    Next Story
    ×