search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களில் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு
    X

    வெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களில் அமைச்சர் துரைக்கண்ணு ஆய்வு

    வெள்ளம் சூழ்ந்த காவிரி கரையோர கிராமங்களை அமைச்சர் துரைக்கண்ணு பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    கபிஸ்தலம்:

    கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த 4 நாட்களாக கொள்ளிட ஆற்றில் அதிகளவில் நீர் திறந்துவிடப்பட்டதையடுத்து கொள்ளிட கரையோர பகுதிகளான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குடி, கூடலூர், புதுக்குடி, வாழ்க்கை, திருவைகாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வந்த குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.

    இதனை அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, வைத்திலிங்கம் எம்.பி., கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறி தாழ்வான பகுதிகளில் குடியிருக்க வேண்டாம் என அறிவுறுத்தி அவர்களுக்கு மாற்று ஏற்பாடாக சமுதாயக்கூடம், பள்ளிக்கூடங்களில் தங்கவைத்து அவர்களுக்கு உணவு வழங்கினர். தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    மேலும் கொள்ளிட கரையோர பகுதிகளில் தாழ்வாக உள்ள இடங்களில் தண்ணீர் வெளியேறாமல் இருக்க பொதுப்பணித்துறை மூலம் மணல் அடுக்கும் பணியை செய்ய அறிவுறுத்தினர்.

    அமைச்சருடன் முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார், திட்ட இயக்குனர் மந்திராசலம், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் கோபிநாதன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், கூட்டுறவு சங்க தலைவர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், ஆணையர்கள் நாராயணன், அறிவானந்தம், பொறியாளர்கள் விஜயகுமார், கருணாநிதி, மற்றும் வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×