search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி நாடார் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கருணாநிதி, வாஜ்பாய்க்கு அஞ்சலி
    X

    திருச்சி நாடார் பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் கருணாநிதி, வாஜ்பாய்க்கு அஞ்சலி

    திருச்சி நாடார் பேரவை சார்பில் நடத்த கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி நாடார் பேரவை சார்பில் நடத்த கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    திருச்சி நாடார் பேரவை உறுப்பினர் கூட்டம் பீம நகரில் நடந்தது. இதில் கவுரவத்தலைவர்கள் ஜெயமோகன், குணசேகரன், ஜெயராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் ராஜ் குமார், தலைவர் ஜே.டி.ஆர்.சுரேஷ், பொருளாளர் டாக்டர் மனோஜ், மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.வி.மணி, புறநகர செயலாளர் சுப் பிரமணியன், இளைஞரணி செயலாளர் பன்னீர் செல்வம், மாநில துணை செயலாளர் ஜாம்சன், துணைத்தலைவர் ஜெடிக்ஸ், இளைஞரணி துணை செயலாளர் ஜெயபால், மாநகர துணைச்செயலாளர் செல்வக்குமார், சட்ட ஆலோசகர் தாமஸ், பொதுக்குழு ஆலோசகர் ஜான்ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை அலுவலர் லெட்சுமணன் கலந்து கொண்டு மாநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பீமநகர் பகுதி செயலாளர் கண்ணனை நியமித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை லெட்சுமணன் வெளியிட பொதுச்செயலாளர் ராஜ்குமார் பெற்றுக் கொண்டார்.

    கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் ஜெயராஜ், தர்மராஜ், பாலகிருஷ்ணன், பட்டுமுருகன், விஜி, ராஜேஷ், சாமி ஸ்டோர் ராஜேஷ், ரெங்கநாராயணன், பீமநகர் எஸ்.ராஜேஷ், பால்துரை, செல்வம், ஜானகிராமன், முருகானந்தம், சாமுவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய், தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரது மறைவுக்கு திருச்சி நாடார் பேரவை சார்பில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    Next Story
    ×