search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்
    X

    கரூர் அருகே கால்நடை மருத்துவ முகாம்

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.

    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் உத்தரவின் பேரில் கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் கால்நடை மருத்துவ முகாம் காகிதபுரத்தில் நடைபெற்றது.

    முகாமில் கால்நடை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டு மாடுகள், ஆடுகளுக்கு தாதுஉப்புக் கலவை , மருந்து, மாத்திரை, காய்ச்சல், கழிச்சல்களுக்கு மாத்திரைகள், கால் நடைகளுக்கு ஏற்பட்ட புண்களுக்கு ஆண்டிசெப்டிக் கிரீம், சத்துமாத்திரை ஆகியவற்றை வழங்கினர். சினை பரிசோதனையும் செய்யப்பட்டது.

    இதில் காகிதபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் 200-க்கும் மேற்பட்ட கால் நடைகளை கொண்டுவந்து பயன் பெற்றனர்.

    Next Story
    ×