search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் ரூ. 1.76 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்
    X

    பெரம்பலூரில் ரூ. 1.76 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய கலெக்டர்

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மாவிலங்கை கிராம மனுநீதி நாள் நிறைவு விழாவில் ரூ. 1.76 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தா வழங்கினார்.
    பாடாலூர்:

    ஆலத்தூர் தாலுகா மாவிலங்கை கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார்.

    ஆலத்தூர் ஒன்றியத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கிராமப் புறங்களில் வாழும் பெண்கள் அனைவருக்கும் பொருளாதாரத்தில் முன்னேற்ற மடைவதற்கு திறன் பயிற்சி, மதிப்பு கூட்டு பயிற்சி உள்ளிடவைகள் பெண்களுக்கு அளிக்கப்படடு வருகிறது. அதன் மூலம் அவர்களுடைய குடும்பம் முன்னேற்றம் அடைவதுடன், நமது தேசமும் வளர்ச்சி அடையும் என்றார்.

    நிகழ்ச்சியில் வருவாய்த் துறை மூலம் 129 பயனாளிகளுக்கு ரூ.29.43 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், ஊரகவளர்ச்சித்துறை மூலம் 56 பயனாளிகளுக்கு ரூ.95.25 லட்சம் மதிப்பிலான பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கடன் மான்யமும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகளும், வேளாண்மைத் துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.1.91 லட்சம் மதிப்பிலான சொட்டு நீர் பாசனத்திற்கான கருவிகளும், தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.3.37 லட்சம் மதிப்பிலான வெங்காயம் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும்,

    மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.27 ஆயிரம் மதிப்பிலான சிறப்பு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், கூட்டுறவுத் துறை மூலம் 76 பயனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பிலான விவசாயக் கடன் போன்ற நலத்திட்ட உதவிகளையும், கால்நடைத் துறை மூலம் 48 பயனாளிகளுக்கு ரூ.5.08 லட்சம் மதிப்பிலான நாட்டுக் கோழி வளர்ப்பில் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும் என பல்வேறு துறைகளின் சார்பில் 322 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தா வழங்கினார்.
    Next Story
    ×