search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழப்பாவூர் நெல் வியாபாரிகள் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு 25 குவிண்டால் அரிசி வழங்கல்
    X

    கீழப்பாவூர் நெல் வியாபாரிகள் சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு 25 குவிண்டால் அரிசி வழங்கல்

    கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.
    பாவூர்சத்திரம்:

    கடும் மழை, வெள்ளத்தால் கேரளாவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதையடுத்து கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கீழப்பாவூர் வட்டார நெல், அரிசி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் 25 குவிண்டால் அரிசி வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சங்கத் தலைவர் கருத்தப்பாண்டி, செயலாளர் ஆதிமூலம், பொருளாளர் மாடசாமி, துணை செயலாளர் ஆறுமுகநயினார், அமைப்பாளர் தமிழ்மணி ஆகியோர் கேரள மக்களுக்கு 25 குவிண்டால் அரிசியை கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கினர்.

    இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரராஜன், ஊராட்சி செயலாளர்கள் தேசிங்கராஜன், முத்துக்குமார், தங்கச்செல்வம், வல்லாள மகாராஜன், நடராஜன், அரிசி வியாபாரிகள் சங்க நிர்வாக உறுப்பினர்கள் நாராயணன், மாடசாமி, ஜெயராமன், சுப்பிரமணியன், வெற்றி கருப்பன், மாடசாமி, நாகராஜன், பிரபு, காளிமுத்து உட்பட சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×