search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள்
    X

    வெள்ளம் பாதித்த கேரள மக்களுக்கு வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு திண்டுக்கல் வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வர்த்தகர் சங்கம், ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப் சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் மாவட்ட கலெக்டர் வினய், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்கப்பட்டது.

    வர்த்தகர் சங்க தலைவர் குப்புசாமி, செயலாளர் பாலன், பொருளாளர் லியோபிரதீப், துணைத்தலைவர்கள் ஜி.சுந்தரராஜன், கே.ஏ.ஆர். மைதீன், நிர்வாகிகள் வெங்கடேசன், ஸ்ரீதர் ஆகியோர் வழங்கினர்.

    பொருட்களை பெற்றுக் கொண்டு அமைச்சர் சீனிவாசன் பேசுகையில், கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதில் திண்டுக்கல் மாவட்டம் முன்னோடியாக உள்ளது. இதுவரை இம்மாவட்டத்தின் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எனது சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண உதவியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி உள்ளேன். நிவாரண பொருட்கள் வழங்க உள்ளவர்கள் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளரை (பொது) தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து நிலக்கடலை வர்த்தகர் சங்கம் சார்பில் ரூ.1.25 லட்சத்திற்கான காசோலையும், திண்டுக்கல் சாகர் மெடிக்கல் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ பொருட்களும் மாவட்ட கலெக்டரிடம் ஒப்படைக்கப்பட்டு கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் உதயகுமார் எம்.பி., மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×