search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் கரும்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு
    X

    சத்தியமங்கலம்-திம்பம் மலைப்பாதையில் கரும்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது - போக்குவரத்து பாதிப்பு

    சத்தியமங்கலம் மற்றும் திம்பம் மலைப்பாதையில் கரும்புகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கரும்புகள் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்த கொண்டிருந்தது.

    இந்த லாரி இன்று காலை 8 மணிக்கு சத்தியமங்கலம் -திம்பம் மலைப்பாதையில் 7-வது சுற்றுப்பாதையில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து லாரி விலகி ரோட்டில் கவிழ்ந்தது.

    இதனால் ரோடு முழுவதும் கரும்புகள் சிதறின. லாரி கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு மீட்பு பணியினர் விரைந்துள்ளனர்.

    மலைப்பாதை இறக்கப் பாதையாக இருப்பதால் யானைகள் வர வாய்ப்பில்லை. இந்த லாரிஆசனூர் பகுதியில் விபத்தில் சிக்கி இருந்தால் கரும்புகளை சாப்பிட யானைகள் கூட்டமே வந்திருக்கும். போக்குவரத்து பாதிப்பால் பஸ் மற்றும் வாகனங்களில் வந்த பயணிகள் மிகவும் பாதிப்படைந்தனர்.

    Next Story
    ×