search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாலக்கோடு அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை
    X

    பாலக்கோடு அருகே 2 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை

    பாலக்கோடு அருகே கணவர் குடித்துவிட்டு தகராறு செய்வதால், மனைவேதனையில் 2 குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து பெண் தற்கொலை செய்து கெண்டார்.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டை அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள சின்னகவுண்டன அள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ், காய்கறி வியாபாரி.

    இவரது மனைவி ஜோதி (வயது 30). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஷாலினி(13), யோகஸ்ரீ(9) என்ற 2 குழந்தைகள் உள்ளன. கோவிந்தராஜ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வாராம்.

    நேற்றும் இதேபோல குடித்து விட்டு வந்து தகராறு செய்தாதால் மனமுடைந்த ஜோதி, தோட்டத்துக்கு அடிக்க உதவும் பூச்சி மருந்து எடுத்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டு தானும் குடித்துவிட்டார். 3 பேரையும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோதி இறந்து போனார்.

    2 குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பஞ்சப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×