search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டிரைவர் கைது
    X

    அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரி பறிமுதல் - டிரைவர் கைது

    கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்தனர்.
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை போலீசார் நேற்று கோவிலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். அப்போது அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் அதிராம்பட்டினம் செட்டித்தெருவை சேர்ந்த ராமநாதன் (வயது 39) என்பவரை கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியை பறிமுதல் செய்தனர். 
    Next Story
    ×