search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்கலையில் காதல் ஜோடியை சுற்றி வளைத்து பிடித்த உறவினர்கள்
    X

    தக்கலையில் காதல் ஜோடியை சுற்றி வளைத்து பிடித்த உறவினர்கள்

    தக்கலையில் காதலனுடன் சுற்றி திரிந்த பிளஸ் 1 மாணவியை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
    தக்கலை:

    தக்கலை பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 மாணவி நேற்று முன்தினம் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து மாணவியின் தாயார் தக்கலை போலீஸ் நிலையத்தில் தன் மகள் காணாமல் போய் விட்டதாகவும், அவரை கண்டுபிடித்து தரும்படியும் கூறி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மாணவியை தேடி வந்தனர். 

    இந்தநிலையில் நேற்று அந்த மாணவி, அவரது தாயாருக்கு செல்போனில் பேசினார். அப்போது தனது காதலனுடன் தான் சென்றதாக தெரிவித்தார். தாயார் தொடர்ந்து அவரிடம் கனிவாக பேசியதில் அவர் வீடு திரும்ப சம்மதித்தார். அதன்படி தக்கலை ஆஸ்பத்திரி அருகே வருவதாக மாணவி தெரிவித்தார். 

    உடனே மாணவியின் உறவினர்களும், போலீசாரும் அங்கு காத்திருந்தனர். மாணவி தனது காதலருடன் மோட்டார் சைக்கிளில் வந்திறங்கினார். அவரை உறவினர்களும், போலீசாரும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாணவியை அழைத்துச் சென்ற வாலிபர் மணவாளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர். 
    அவரும், மாணவியும் மைனர் என்பதால் அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 
    Next Story
    ×