search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நன்னிலம் அருகே வீடு இடிந்து விழுந்து வாலிபர் பலி
    X

    நன்னிலம் அருகே வீடு இடிந்து விழுந்து வாலிபர் பலி

    நன்னிலம் அருகே வீடு இடிந்து விழுந்து வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவாரூர்:

    நன்னிலம் அருகே உள்ள ஆனைக்குப்பம், கல்லடிச்சேரியை சேர்ந்தவர் செல்வம். இவர் அதே பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொகுப்பு வீட்டில் வசித்து வருகிறார்.

    அந்த வீடு பழுதடைந்து விட்டதால் அதனை இடித்துவிட்டு புதிய வீடுகட்ட ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த பழைய வீட்டை இடித்து அகற்றும் பணி நடைபெற்று வந்தது.

    இன்று செல்வத்தின் மகன் முருகானந்தம் (23), மருதம்பட்டினத்தை சேர்ந்த கதிரேசன் (23) ஆகியோர் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுவர் இடிந்து விழுந்ததால் இருவரும் கீழே குதித்தனர். இதில் கதிரேசன் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டார்.

    இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த கதிரேசன் பரிதாபமாக இறந்தார். மறுபுறம் குதித்த முருகானந்தம் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றிய புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×