search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது
    X

    கைப்பந்து போட்டியில் தகராறு - வாலிபரின் கையை துண்டித்த 5 பேர் கைது

    திருவள்ளூர் அருகே கைப்பந்து போட்டியில் தகராறில் வாலிபரின் கையை துண்டித்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டில் வசிப்பவர் பால்தினகரன். இவர்கடந்த வாரம் ரெயில் நிலைய மேம்பாலம் அருகே கை வெட்டப்பட்ட நிலையில் காயங்களுடன் கிடந்தார்.

    அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து செவ்வாப்போட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் விசாரணை நடத்தி வந்தார்.

    இந்தநிலையில் இதில் தொடர்புடைய வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்கிற ஜெபராஜ்,லல்லு என்கிற சார்லஸ்ராஜ்,மோகன்குமார், குமார்,தினேஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த மாதம் கைப்பந்து போட்டியில் ஏற்பட்ட தகராறு காரணமாக இவர்கள் பால் தினகரனின் கையை வெட்டியது தெரிய வந்தது. கைதான ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×