என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமயபுரத்தில் மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது
Byமாலை மலர்18 Aug 2018 5:31 PM GMT (Updated: 18 Aug 2018 5:31 PM GMT)
சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
சமயபுரம்:
சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் எசனைக்கோரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த எசனைக்கோரையை சேர்ந்த மாரிமுத்து மகன் பனையடியான்(வயது 32), சின்னத்தம்பி(43), மேலவாளாடியைச் சேர்ந்த அசோக்குமார்(46) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் எசனைக்கோரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த எசனைக்கோரையை சேர்ந்த மாரிமுத்து மகன் பனையடியான்(வயது 32), சின்னத்தம்பி(43), மேலவாளாடியைச் சேர்ந்த அசோக்குமார்(46) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X