search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சமயபுரத்தில் மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது
    X

    சமயபுரத்தில் மணல் ஏற்றி வந்த 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - 3 பேர் கைது

    சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் சென்ற 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    சமயபுரம்:

    சமயபுரம் பகுதியில் அனுமதியின்றி நீர்நிலைகளில் இருந்து மணல் அள்ளிச் செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அகிலன், ஏட்டு மகேஷ்குமார் மற்றும் போலீசார் எசனைக்கோரை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 3 மாட்டு வண்டிகளை நிறுத்தி, அதில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அந்த மாட்டு வண்டிகளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை ஓட்டி வந்த எசனைக்கோரையை சேர்ந்த மாரிமுத்து மகன் பனையடியான்(வயது 32), சின்னத்தம்பி(43), மேலவாளாடியைச் சேர்ந்த அசோக்குமார்(46) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 
    Next Story
    ×