search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துறையூர் அருகே வெங்காயத்தை திருட வந்த 3 பேர் கைது
    X

    துறையூர் அருகே வெங்காயத்தை திருட வந்த 3 பேர் கைது

    வெங்காயத்தை திருட வந்த 3 பேரை காவலுக்கு இருந்த இளைஞர்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    துறையூர்:

    துறையூரை அடுத்த கீழகுன்னுபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு விவசாயிகள் தோட்டங்களில் தாள் அகற்றுவதற்காக பட்டறை போட்டு வைத்துள்ளனர். கடந்த சில நாட்களாக இரவு வேளைகளில் தோட்டங்களில் இருந்த வெங்காய பட்டறைகளில் இருந்து வெங்காயம் திருடு போனது. இதையடுத்து வெங்காய பட்டறைகள் அமைக்கப்பட்ட தோட்டங்களில் இளைஞர்கள் இரவில் காவல் இருந்து வந்தனர். 

    இந்நிலையில் நேற்று இரவு கீழகுன்னு பட்டியை சேர்ந்த ராமராஜ் என்பவர் தோட்டத்தில் சரக்கு ஆட்டோவுடன் 3 மர்ம நபர்கள் வந்தனர். பின்னர் அவர்கள் சரக்கு வாகனத்தில் வெங்காயத்தை ஏற்றினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் மர்மநபர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து துறையூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    விசாரனையில் அவர்கள் சேலம் மாவட்டம் நாரை கிணறை சேர்ந்த அமல்ராஜ் (22) செம்பன் காட்டை சேர்ந்த வரதராஜ் (25) மற்றும் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.  அவர்கள் கொண்டு வந்த சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
    Next Story
    ×