என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் கைது
Byமாலை மலர்18 Aug 2018 12:11 PM GMT (Updated: 18 Aug 2018 12:11 PM GMT)
தஞ்சை அரசு மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (வயது 37). இவர் கடந்த 14-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையிலேயே இறந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவரது உறவினர்கள் டாக்டர்கள் கவனக்குறைவே கவிதா இறப்பிற்கு காரணம் என்று கூறி தகராறு செய்து கவிதா அனுமதிக்கப்பட்டிருந்த வார்டை சேதப்படுத்தினர்.
இதனை கண்டித்து 15-ந் தேதி தஞ்சை மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர். இதைதொடர்ந்து தஞ்சை மருத்துவக் கல்லூரி போலீசார் அங்கு தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குபதிவு செய்து தேடி வந்தனர்.
இந்நிலையில் கவிதாவின் உறவினர்களான தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன்களான ஜெயக்குமார் , சிவகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X