search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே லாரிகள் மோதல் - டிரைவர் பலி
    X

    திருச்சி அருகே லாரிகள் மோதல் - டிரைவர் பலி

    திருச்சி அருகே விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன

    முசிறி:

    சேலம் புதூர்சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 45). இவர் பார்சல் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். நேற்று இவர் சேலத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார்.

    இன்று காலை திருச்சி மாவட்டம் முசிறி சுடுகாட்டுத் துறை பகுதியில் செல்லும் போது, அந்த வழியாக தொட்டியம் அரங்கூர் கிளிஞ்சாநத்தம் நடுத்தெருவை சேர்ந்த சக்திரசேகர்(32) என்பவர் ஓட்டிச்சென்ற லாரியும், ராஜசேகர் லாரியும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

    உடனே அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு முசிறி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராஜசேகர் இறந்தார். சந்திர சேகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×