search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை
    X

    அழகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை

    அழகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள அய்யத்தான்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது40), மின்வாரிய ஊழியர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.

    மதுபோதைக்கு அடிமையான பெரியசாமி தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்காததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதையில் வந்த பெரியசாமியை சித்ரா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் திடீரென பெரிய சாமி மாயமாகி விட்டார். வேலைக்கும் செல்ல வில்லை.

    இந்த நிலையில் வீட்டின் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையை சென்று பார்த்தபோது பெரியசாமி தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா மேலவளவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பெரியசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×