என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அழகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர் தற்கொலை
மதுரை:
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள அய்யத்தான்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது40), மின்வாரிய ஊழியர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
மதுபோதைக்கு அடிமையான பெரியசாமி தினமும் மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். வீட்டு செலவுக்கும் பணம் கொடுக்காததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதையில் வந்த பெரியசாமியை சித்ரா கண்டித்ததாக தெரிகிறது. இதனால் திடீரென பெரிய சாமி மாயமாகி விட்டார். வேலைக்கும் செல்ல வில்லை.
இந்த நிலையில் வீட்டின் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறையை சென்று பார்த்தபோது பெரியசாமி தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா மேலவளவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியசாமி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்