என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூரில் இருந்து கோவைக்கு மணல் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்18 Aug 2018 9:45 AM GMT (Updated: 18 Aug 2018 9:45 AM GMT)
கடலூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து கோவைக்கு மணல் கடத்திய 4 லாரிகளை மந்தாரக்குப்பம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதில் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் பல்வேறு இடங்களில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் லாரி, மினி லாரி உள்ளிட்ட வாகனங்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு மந்தாரக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் கமல்ஹாசன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக 7 டிப்பர் லாரி வந்துகொண்டிருந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்ததில் நாலு மணல் லாரிகள் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது.
பின்னர் 4 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை செய்ததில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து மணல் கடத்தி கொண்டு கோயம்புத்தூருக்கு செல்ல இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 லாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் மணல் கடத்தல் தொடர்பான வேறு யாரேனும் இதில் தொடர்பு உள்ளார்களா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வழியாக மணல் கடத்தி கொண்டு வெளியூருக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X