என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலங்குளம் அருகே 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின - நீரில் மூழ்கி மான் பலி
Byமாலை மலர்18 Aug 2018 7:53 AM GMT (Updated: 18 Aug 2018 7:53 AM GMT)
அருணாசலப்பேரி கிராமத்தினுள் நேற்று வெள்ளம் புகுந்ததால் மிளகாய், தக்காளி உள்ளிட்ட 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது.
ஆலங்குளம்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை, குற்றால அருவிகளில் வெள்ளம் ஆகியவற்றால் ஆலங்குளம் தாலுகாவின் வடக்குப் பகுதி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நாகல்குளம் நிரம்பிய நிலையில் அதன் வடக்குக் கரை பகுதி அரிப்பு ஏற்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் இக்குளத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுத்தல்படி பொதுப்பணித்துறையினர் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி வரும் நிலையில் அதன் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதிகளில் மண் மூட்டைகளை அடுக்கி அரிப்பை தடுத்தனர்.
நெட்டூர் சிற்றாற்றில் வெள்ளம் அதிகரித்த நிலையில் அருணாசலப்பேரி கிராமத்தினுள் நேற்று வெள்ளம் புகுந்தது. வயல் வெளிக்குள் வெள்ளம் பாய்ந்ததால் மிளகாய், தக்காளி உள்ளிட்ட 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. சம்பவ இடங்களுக்கு சப்-கலெக்டர் விஜயகுமார், ஆலங்குளம் தாசில்தார் பிரபாகர் அருண், ஆலங்குளம் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் வடியும் வகையில் பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைத்தனர். இதனிடையே அருணாசலப்பேரி கிராமத்தில் வந்த வெள்ளத்தில் மான் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தது.
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் மழை, குற்றால அருவிகளில் வெள்ளம் ஆகியவற்றால் ஆலங்குளம் தாலுகாவின் வடக்குப் பகுதி குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. நாகல்குளம் நிரம்பிய நிலையில் அதன் வடக்குக் கரை பகுதி அரிப்பு ஏற்பட்ட நிலையில் அது சரி செய்யப்பட்டது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் இக்குளத்தில் மாவட்ட ஆட்சியர் அறிவுத்தல்படி பொதுப்பணித்துறையினர் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து குளித்து வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள நாரணபுரம் கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி வரும் நிலையில் அதன் கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதிகளில் மண் மூட்டைகளை அடுக்கி அரிப்பை தடுத்தனர்.
நெட்டூர் சிற்றாற்றில் வெள்ளம் அதிகரித்த நிலையில் அருணாசலப்பேரி கிராமத்தினுள் நேற்று வெள்ளம் புகுந்தது. வயல் வெளிக்குள் வெள்ளம் பாய்ந்ததால் மிளகாய், தக்காளி உள்ளிட்ட 50 ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. சம்பவ இடங்களுக்கு சப்-கலெக்டர் விஜயகுமார், ஆலங்குளம் தாசில்தார் பிரபாகர் அருண், ஆலங்குளம் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் பார்வையிட்டு தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள நீர் வடியும் வகையில் பொக்லைன் எந்திரம் கொண்டு சீரமைத்தனர். இதனிடையே அருணாசலப்பேரி கிராமத்தில் வந்த வெள்ளத்தில் மான் ஒன்று அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X