search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது
    X

    புன்னம்சத்திரம் அருகே அனுமதியின்றி மது விற்ற 3 பெண்கள் கைது

    புன்னம்சத்திரம் அருகே பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மது விற்ற 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே பெரியரங்கம் பாளையத்தைச் சேர்ந்தவர் வளர்மதி (45). இவரது வீட்டின் அருகே அனுமதியன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. 

    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு வளர்மதி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் வளர்மதியை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதேபோல், கந்தம்பாளையம் சேர்ந்தவர்கள் சுலோச்சனா (40), சாந்தாமணி (55). இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
     
    தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு சுலோச்சனா மற்றும் சாந்தாமணி மது பாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் சுலோச்சனாவையும், சாந்தாமணியையும் கைது செய்து அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×