search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
    X

    மொடக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியத்திற்குள்பட்ட 23 ஊராட்சிகளில் சுதந்திரதினத்தையொட்டி கிராமசபா கூட்டம் நடைபெற்றது.

    நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் சாவடிபாளையம்புதூர் பகுதி பொதுமக்கள் குடிநீர், சாலைவசதி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதர வேண்டும் கூட்டத்தில் மனு அளித்தனர்.

    அதிகாரிகள் மனு குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விரிவாக பொதுமக்களிடம் எடுத்துக்கூறப்பட்டது.

    இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்ற கூட்டத்தில் நியாயவிலைகடைகள் குறித்தும், சுகாதாரம், மின்சாரவசதி, இலவச வீடு கட்டும் திட்டம், குடிநீர் விநியோகம் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டது.

    ஆனந்தம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்க தலைவர் கே.ஆர். சுதந்திரராசு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு, மொடக்குறிச்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி விவசாய நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க அரசு அனுமதிக்க கூடாது என்று மனு அளித்தனர். அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று உறுதி அளித்தனர்.

    இதேபோல் பல்வேறு மற்ற ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றது.

    Next Story
    ×