search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
    X

    திண்டுக்கல்லில் வாலிபர் கொலை வழக்கில் அண்ணன்- தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

    திண்டுக்கல்லில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ஆர்.வி. நகரை சேர்ந்தவர் குமரேசன். கடந்த ஜூன்18-ந் தேதி அதே பகுதியில் ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக நாராயணம் பிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த ஆசிக்முகமது, முகமது சேக் அப்துல்லா, குடைபாறைப் பட்டியை சேர்ந்த அசோக்குமார், அவரது தம்பி சந்திரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 4 பேர் மீதும் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. எனவே அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் பரிந்துரை செய்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் வினய் அண்ணன், தம்பி உள்பட 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

    Next Story
    ×