search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் நகைப்பட்டறை அதிபர் வீட்டில் 25 பவுன்-பணம் கொள்ளை
    X

    விருதுநகரில் நகைப்பட்டறை அதிபர் வீட்டில் 25 பவுன்-பணம் கொள்ளை

    விருதுநகரில் நகைப்பட்டறை அதிபர் வீட்டில் 25 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    விருதுநகர்:

    விருதுநகர் கே.ஆர். கார்டனைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 48). நகைப்பட்டறை அதிபர். இவரது மூத்த மகன் மாரிக்கனி. கோவையில் படித்து வருகிறார்.

    மகனை கோவையில் விடுவதற்காக அருணாச்சலமும், அவரது மனைவியும் சென்று விட்டனர். அருணாச்சலத்தின் 2-வது மகன் சண்முகராஜ் பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் பள்ளிக்குச்சென்று விட்டு நேற்று இரவு அதே பகுதியில் உள்ள சித்தப்பா வீட்டில் தங்கினார். வீட்டுச்சாவி அவரிடம் தான் இருந்தது.

    இந்த நிலையில் அருணாச்சலம் இன்று அதிகாலை ஊர் திரும்பினார். வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்ற அவர் பீரோ திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் 20¼ பவுன் நகைகளை வைத்திருந்த பையும் இருந்தது. பீரோவில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் காணவில்லை.

    இந்த துணிகர கொள்ளை குறித்து விருதுநகர் மேற்கு போலீசில் அருணாச்சலம் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீஸ் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது வீட்டைச் சுற்றி வந்து படுத்துக் கொண்டது. வீடு பூட்டிய படியே இருக்கும் போது கொள்ளை நடைபெற்றது எப்படி? என்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×