search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை
    X

    சின்னாளபட்டியில் துர்நாற்றம் வீசும் குடிநீர் சப்ளை

    சின்னாளபட்டியில் வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் அருகே சின்னாளபட்டிக்கு பேரணை பகுதி சித்தர்கள் நத்தத்தில் இருந்தும், ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் இருந்தும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. வாரத்திற்கு 2 முறை விநியோகிக்கப்படும் இந்த குடிநீரில் அவ்வப்போது துர்நாற்றம் விசுவதும் தொடர் கதையாக உள்ளது.

    2 -வது வார்டு பகுதிக்கு வினியோகிக்கப்பட்ட குடிநீரை பிடித்த போது துர்நாற்றம் வீசியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீர் வளுவளுப்பாக இருந்ததோடு, பிடித்து குடம் மற்றும் பாத்திரங்களில் வைக்கப்பட்ட தண்ணீர் நுரையாக இருந்தது. மேலும், குடிக்க முடியாத நிலையில் அழுக்கு நிறைந்து துர்நாற்றமும், அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலந்தும் இருந்தது. தண்ணீரை கையில் அள்ளி பார்த்தால் பசை போல் இருந்துள்ளது. அந்த தண்ணீரை குடிக்க முடியாத நிலையில் இருந்தது. 

    இது குறித்து பொதுமக்கள் கூறுகையில் ஆத்தூர் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் குழாய்கள் தரமற்றவையாக இருப்பதால் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவது வாடிக்கையாக உள்ளது.

    இதுபோன்ற நேரங்களில் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் காலதாமதமாக அடைக்கின்றனர். மேலும், சரியாக அடைக்கப்படாமல் இருப்பதால் சாக்கடை தண்ணீர் குடிநீரோடு கலந்து வருகிறது.

    இதனை மறைக்க பேரூராட்சி நிர்வாகம் சின்னாளபட்டியில் தண்ணீரை சேமிக்கும் மேல்நிலைத் தொட்டிகளில் அதிகளவு பிளிச்சிங் பவுடரை கொட்டுகிறது. இதனால் தான் சாக்கடை கலந்த தண்ணீரில் அதிகளவு பிளிச்சிங் பவுடர் கலப்பதால் இது போன்று நுரையாகவும், குடிக்க முடியாத நிலையில் தண்ணீரும் உள்ளது. 

    இவ்வாறு தெரிவித்தனர்.

    Next Story
    ×